Dec 8, 2008

தமிழுக்காக

உன்னை வைத்து(நினைத்து) சிலர்

சிலர் அவர்களின் முகங்களை
அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள்

சிலர் அவர்களுக்கு தேவையான
ஆதாயம் தேடுகிறார்கள்

சிலர் கட்டாயத்தால் உன்னை
கசக்கி காயப்போடுகிறார்கள்

சிலர் பழமையைச் சொல்லி
பயமுறுத்துகிறார்கள்

சிலர் நீ தோன்றிய காலம்
சொல்லிகலக்கமடைய வைக்கிறார்கள்;

உன்னை விவாதித்து அரசியல் நடக்கிறது
உன்னை விற்று வியாபாரம் நடக்கின்றது

ஆனால் உன் உண்மை உருவை
யாராலும் உணரமுடியவில்லை.

நான் உணர்ந்துவிட்டேன்
பாத்திரம் தகுந்து மாறும் நீரைப் போன்றவள்

பச்சைக் குழந்தை நா முதல்பாழும் கிழவன் நா வரை
பக்குவமாக பவனிவரும்பட்டாம்பூச்சி நீ

தோன்றிய நாள்முதல்நிலை
மாறாமல் இருக்கும் கல் அல்ல- நீ
கல்லை சிற்பமாக மாற்றி
உயிரூட்டும் உன்னத படைப்பாளி - நீ

அன்று கற் குகையில் வாழ்ந்தான்
அவனுக்குக் கடினமாக இருந்தாய்.
இன்று கணிணியுகத்தில் வாழ்கிறான்
அதனால் நவீனமாக நளினமாக இருக்கிறாய்.

இதில் வியப்பதற்கும் ஒன்றுமில்லை
அதில் விவாதிப்பதற்கும் ஒன்றுமில்லை

உருவம் மாறியதால் உருக்குலையவில்லை
பெரிய கடல் ஆவியாகி பின் மழைத்துளியாய்
மண்ணில் விழுந்து மனிதனை உயிர்காப்பதுபோல்
நீயும் உன்னை உருமாற்றி ஒலி மாற்றி
மனதை உணரவைக்கிறாய்

-
கோவையிலிருந்து
மு.சரளா

-------------------------------------------------------------------------------
விவாதியின் வாசகி மு.சரளா இந்தியாவிலிருந்து அனுப்பிய கவிதை இது.!
வாசகர்கள் தங்கள் படைப்புக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
tamildebate@gmail.com

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP