Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Dec 8, 2008

தமிழுக்காக

உன்னை வைத்து(நினைத்து) சிலர்

சிலர் அவர்களின் முகங்களை
அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள்

சிலர் அவர்களுக்கு தேவையான
ஆதாயம் தேடுகிறார்கள்

சிலர் கட்டாயத்தால் உன்னை
கசக்கி காயப்போடுகிறார்கள்

சிலர் பழமையைச் சொல்லி
பயமுறுத்துகிறார்கள்

சிலர் நீ தோன்றிய காலம்
சொல்லிகலக்கமடைய வைக்கிறார்கள்;

உன்னை விவாதித்து அரசியல் நடக்கிறது
உன்னை விற்று வியாபாரம் நடக்கின்றது

ஆனால் உன் உண்மை உருவை
யாராலும் உணரமுடியவில்லை.

நான் உணர்ந்துவிட்டேன்
பாத்திரம் தகுந்து மாறும் நீரைப் போன்றவள்

பச்சைக் குழந்தை நா முதல்பாழும் கிழவன் நா வரை
பக்குவமாக பவனிவரும்பட்டாம்பூச்சி நீ

தோன்றிய நாள்முதல்நிலை
மாறாமல் இருக்கும் கல் அல்ல- நீ
கல்லை சிற்பமாக மாற்றி
உயிரூட்டும் உன்னத படைப்பாளி - நீ

அன்று கற் குகையில் வாழ்ந்தான்
அவனுக்குக் கடினமாக இருந்தாய்.
இன்று கணிணியுகத்தில் வாழ்கிறான்
அதனால் நவீனமாக நளினமாக இருக்கிறாய்.

இதில் வியப்பதற்கும் ஒன்றுமில்லை
அதில் விவாதிப்பதற்கும் ஒன்றுமில்லை

உருவம் மாறியதால் உருக்குலையவில்லை
பெரிய கடல் ஆவியாகி பின் மழைத்துளியாய்
மண்ணில் விழுந்து மனிதனை உயிர்காப்பதுபோல்
நீயும் உன்னை உருமாற்றி ஒலி மாற்றி
மனதை உணரவைக்கிறாய்

-
கோவையிலிருந்து
மு.சரளா

-------------------------------------------------------------------------------
விவாதியின் வாசகி மு.சரளா இந்தியாவிலிருந்து அனுப்பிய கவிதை இது.!
வாசகர்கள் தங்கள் படைப்புக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
tamildebate@gmail.com

Read more...

Oct 13, 2008

16 வயதினிலே…

பதினைந்து தாண்டிப் பறந்தோடும்
பட்டாம் பு+ச்சியாய் - பருவத்தின்
வார்ப்புகளில் கரைதொடும்
அலை நுரைகளாய் அள்ளுண்டு
கால் பதித்த - என்
பதினாறு வயது….!

கற்பனைத் தூரிகைகள் கொண்டு
என் வாழ்க்கை ஓவியங்களை வரைந்துவிட்ட
என் நினைவுப் பக்கங்களை நிரப்பிவிட்ட
அந்த பதினாறு வயதென்ற பனிமழை….
அதில் நனைந்து விட்ட போதும் - இன்றும்
எனக்கு அது கனவு போல….!

இரும்பு உடலின்
உலக்கை உதட்டில் அரும்பிய
பு+னைமுடி மீசையும் - அதை
விரல்களால் நீவிவிட்டு, என் குழந்தைத்
தோழர்கள் நடுவில் கட்டபொம்மன் வீர வசனமுமாய்…
வலம் வந்த அந்த பச்சைமர நாட்கள் - இன்னும் எனக்குள்
மழைநின்றும் மரக்கிளைகள் தூறிய ஒற்றைத்துளிகள்தான்….

பருவத்தின் பிடிகள்தான்
கிளர்ச்சிகளின் உருவம் தான் - இருந்தாலும்
இரவின் மடியில் எழுதிய
கவிதைகள் போல் - இன்னும்
எனக்குள் உயிர்த்து வாழும்
ஒற்றைப்பு+வாய் - என்
16 வயதுக் காதல்…!

இடையிடையே வந்து போகும் பள்ளிப்
பரீட்சைகளின் தோல்விகளும்…
சுட்டுப் போட்டாலும் தட்டுப்படாத - அந்தக்
கணக்குப் பாடமும்….
“பெரிய மனுசன்” நினைப்பில் களவாய்
இழுத்த கட்டுச்சுருட்டின்
புகையிலை வாசமும் - என்
பதினாறு வயதின் இடைச் செருகல்கள்…

இன்று நினைத்தாலும் விழிகள் நிறையும்!
தவறவிடப்பட்ட புகைவண்டியாய்
கையசைக்கும் என் பதினாறு வயதுக் காலங்கள்…
பதினாறு தாண்டி வருடங்கள் போனாலும்
பருவங்கள் மாறிப் புதியவன் ஆனாலும்
என் பழைய மனதும் - அதன்
இளமை நினைப்புக்களும் மட்டும்
தங்கி நிற்கிறது - என்
16 வயதினிலே….!

சு.விஷாகன்

Read more...

Oct 9, 2008

தமில்….

தவறு விடவில்லை நான்….
நிச்சயம்…அது…நிச்சயம்!
பக்தியுடனேயே தமிழ் கற்றேன்…
விடுவேனா தவறு…அதில்…

கணணித் தட்டச்சுப் பிழையுமல்ல…
நானறிவேன்… உண்மை!
ஒருமுறைக்கிருமுறை சரி பார்த்ததல்லவா…
வரவே வராது பிழை….

எல்லாம் சரியாயிருக்க…
தமிழ் - தமிலாகிய கதை தானென்ன?
இது இன்றைய யதார்த்தத்தின் விம்பமோ?
இல்லை…இலகுவாக - காலஞ்செய்த கோலமோ?

கேள்விக்கு மேல் கேள்விகள்….
பாவம் நான்… எனக்குப் பதில்தான் தெரியவில்லை…
ஏனெனில் நான் படிக்கும் “சிலபசில்”…
இந்தக் கேள்விக்கெல்லாம் பதிலில்லை…

இதற்குப் பதில் தேட நேரமில்லை என்னிடம்…
நேரமிருந்தும் ஆர்வமில்லைப் பலரிடம்…
ஆனால் சாட்டு மட்டும் உண்டு எம்மிடம்…
“ஒரு “ல” தானே வித்தியாசம்... - எல்லாம் ஒன்றுதான்”

தமிழ், தமிலாகி விட்டால் பரவாயில்லை…
மொழி, பண்பாடு, பற்றி எமக்கென்ன கவலை….
வாயிற்கு வுருவதைப் பேசுவோம் -
மற்றவருக்குப் புரிந்தால் சரி தானே!
நண்பா கவனம்… நாளை இந்தத் தவறுகளால்
உன் “வாழ்க்கை” சில வேளை “வழுக்கை” ஆகிவிடும்!

என்.கே.அஷோக்பரன்

Read more...

இந்தக் காட்டுக்கு ராஜா சிங்கங்கள்தான்……

வெற்றிகொள்ள, வாகைசூடி
பரியேறிப் பறந்த மறவரொப்ப
சயங்கொள்வதற்காய் தமிழன்னையை முடியில் சூடி
களம் காணப் புறப்பட்டோம்……

கைதட்ட வந்தோரும்
களத்திற் பாய வந்தோரும்
எமைக்கண்டு முகவாய் வியர்வை சிந்த,
புதுக்களத்திற் வீரக் குருளைகளாய்ப் புகுந்தோம்…..

சொல் ஒன்று, அதன் பொருள் வேறாய்ப்
பிரித்துப் பேசும்… ஈனம் செய்ததில்லை!
சொல்லாயுதத்தை முதுகில் குத்திப் பழக்கமுமில்லை!
நேரே சென்றோம், மார்பிற் பாய்ந்தோம்…...

செங்களத்திற் சவால் காணப் போய்விட்டோம்,
காயங்களின்றி, தழும்புகளின்றித் திரும்ப முடியுமா?
முதுகிற் குத்தும் கோழையர் தம்மால் - விழுத்தப்பட்டோம்…..
விழுந்து கிடக்கவில்லை, விழுந்ததற்கும் சோ;த்தெழுந்தோம்!

நேருக்கு நேர் வரத்தயங்கும் ஈனக் கோழைகள்
வீரரை இகழ்வது புதியதல்லவே, புதுமையல்லவே!
முதுகிற் பாய்ந்து தாக்கிய நரிகள், சிங்கத்தின்
ஆட்டத்தை அடக்கிவிட்டோம் என ஊளையிட்டனவாம்!

காயம் கண்டு தயங்கும் கோழைகளல்ல….
காயமே கண்டு நடுங்கும் வேங்கைகள் நாம்!
முதுகில் தந்த தழும்புடனே களத்தில் நின்றோம்…
விழுத்தப்பட்டோம் என்ற இகழ்ச்சியைக் கேட்டபடியே வென்றோம்!

தோற்கடிக்கப்பட்ட போது நாம் அழுவதில்லை
வெற்றியடையும் போது நாம் சிரிப்பதுமில்லை
காரணம்… வென்றாலும், தோற்கடிக்கப்பட்டாலும்
சிங்கம், சிங்கம் தான்….ஈன நரி, நரிதான்!

இன்று நாம் என்றும் போல் ராஜாக்களாய்!
முதுகில் குத்திவிட்டு, வீரப் பெருமை பேசிய நரிகள் எங்கே?
நிமிர்ந்தாலும், படுத்தாலும் “இந்தக் காட்டுக்கு”
ராஜா சிங்கங்கள்தான்! என்றுமே நரிகளல்ல….


என்.கே.அஷோக்பரன்

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP