Oct 11, 2008

தமிழ் மொழிக்கென ஒரு கோயில்

உலகில் உள்ள மொழிகளிலேயே "தமிழ் மொழி" தான் மூத்த மொழி. பன்னெடுங்காலமாக எழுத்து, ஒலிப்பு முறையில் தொடர்ந்துவருகிற இனிமையான மொழி இது. தமிழ் மொழிக்கென சிறப்பான இலக்கண வகைப்பாடும், இலக்கிய சான்றுகளும், ஏராளமாக உள்ளன.

உலக மொழிகளிலேயே தமிழ் மொழிக்குத்தான் கோயில் உள்ளது. இதனை சா.கணேசன் அவர்கள் காரைக்குடியில் உருவாக்கியுள்ளார்.

காரைக்குடியில் தமிழ் மொழியில் காவியம் படைத்த கம்பனுக்காக ஒவ்வொரு ஆண்டும் பங்குனித் திங்களில் கம்பன் விழா நான்கு நாள்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் அனைத்துத் தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொள்கிறார்கள்.

தமிழ் மொழிக்கென ஒரு கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் சா.கணேசன் அவர்களது உள்ளத்தில் தோன்றியது. இவர் காரைக்குடியில் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்தவர். தமிழ்த் தாய்க்கென ஒரு கோவிலை கட்டவேண்டும் என்று எண்ணிய இவர் காரைக்குடி கம்பன் மணிமண்டப வளாகத்தின் தெற்குப் பகுதியில், பொ¢யார் சிலைக்கு அருகில் இந்தக் கோயிலை உருவாக்கியுள்ளார்.

தமிழ்த் தாய்கான உருவமும் வடிவமைப்பும் மாமல்லபுர கட்டடக்கலை கல்லூ¡¢யின் முன்னாள் முதல்வரான திருமிகு கணபதி மற்றும் சா.கணேசன் அவர்களின் கருத்துருவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமிகு ப.சிதம்பரம் அவர்களது முயற்சியால் இக்கோயில் சிறப்பாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் முக்கோண வடிவில் அமைந்த நிலப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் தமிழ்ப் புலவர்களான திருவள்ளுவர், இளங்கோவடிகள் மற்றும் கம்பருக்காக தனித்தனியான பகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் நுழைவுப் பகுதியின் இருபுறங்களிலும் ஒலித்தாய் மற்றும் வா¢த்தாயின் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தாயின் கருவறைப்பகுதி வலது பக்கத்தில் அகத்தியரும், இடது பக்கத்தில் தொல்காப்பியா¢ன் உருவங்களும் உள்ளன.

கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன், தாமரை மலா¢ன் மீது அமர்ந்திருப்பது போன்று கற்சிலையாக உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ்த் தாய் தனது வலது கையில் ஒளிவிளக்கு ஏந்தியும், இடது கையில் வீணையை ஏந்தியும், வலது கீழ்க் கையில் உருத்திராட்ச மாலையை ஏந்தியும், இடது கீழ்க் கையில் ஓலைச்சுவடி ஏந்தியும் காணப்படுகிறது. தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழ்த் தாயின் வளர்ச்சிக்கு உதவியதால், அவர்களது கொடிக்குறியீடான வில், புலி, மீன் சின்னங்கள் தமிழ்த்தாய்ச் சிலையின் தலையைச்சுற்றி அமைந்துள்ளஅரைவட்ட வடிவ அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. தண்டையும், சிலம்பும் தமிழ்த்தாயின் காலை அலங்கா¢க்கும் அணிகலன்களாகக் காணப்படுகின்றன.

தமிழ்த்தாயின் சிலையையும், தமிழ் மொழிக்கான இக்கோவிலை உருவாக்க எண்ணமிட்ட சா.கணேசன் அவர்களது படத்தினையும், இக்கோயில் அமைவிடத்தின் வரைபடத்தையும் கீழுள்ள படத்தில் காணலாம்.



நன்றி
தமிழம்

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP